search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் கைதான ராக்கெட் ராஜா கோவை சிறைக்கு மாற்றம்
    X

    சென்னையில் கைதான ராக்கெட் ராஜா கோவை சிறைக்கு மாற்றம்

    பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு சென்னையில் கைதான ராக்கெட் ராஜா கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். #RocketRaja
    சென்னை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த ராக்கெட் ராஜாவை பல வழக்குகள் தொடர்பாக போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ராக்கெட் ராஜா தங்கி இருக்கும் தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்றனர்.

    துப்பாக்கி முனையில் ராக்கெட் ராஜாவை கைது செய்தனர். அவருடன் இருந்த சுந்தர், பிரகாஷ், நந்தகுமார், ராஜ்சுந்தர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜாவை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், ராக்கெட் ராஜாவுக்கு சிறைக்குள் பல எதிரிகள் இருப்பதாகவும் அவர்களை ஏவிவிட்டு ராக்கெட் ராஜாவை தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ராக்கெட் ராஜாவை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை ராக்கெட் ராஜாவை அவசர அவசரமாக கோவை சிறைக்கு மாற்ற போலீசார் அழைத்து சென்றனர்.

    நள்ளிரவு கோவை கொண்டு செல்லப்பட்ட ராக்கெட் ராஜா அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். #RocketRaja
    Next Story
    ×