என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
Byமாலை மலர்5 May 2018 6:14 PM GMT (Updated: 5 May 2018 6:14 PM GMT)
புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் வருகிற 19-ந் தேதி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.
புதுச்சேரி:
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ந் தேதி வரை தமிழகத்தில் உள்ள 65 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கள ஆய்வு நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து தி.மு.க. அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கள ஆய்வு நடத்த உள்ளார்.
இதையடுத்து புதுவை வடக்கு, தெற்கு மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வருகிற 19-ந் தேதி புதுவை ஆனந்தா இன் ஓட்டலில் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்துகிறார்.
அன்று காலை 8 மணிக்கு புதுவை வடக்கு, தெற்கு நிர்வாகிகளுடனும், பிற்பகல் 2 மணிக்கு காரைக்கால் மாவட்ட நிர்வாகிகளுடனும் கள ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதில் மாநில, தொகுதி, கிளை நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ந் தேதி வரை தமிழகத்தில் உள்ள 65 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கள ஆய்வு நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து தி.மு.க. அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கள ஆய்வு நடத்த உள்ளார்.
இதையடுத்து புதுவை வடக்கு, தெற்கு மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வருகிற 19-ந் தேதி புதுவை ஆனந்தா இன் ஓட்டலில் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்துகிறார்.
அன்று காலை 8 மணிக்கு புதுவை வடக்கு, தெற்கு நிர்வாகிகளுடனும், பிற்பகல் 2 மணிக்கு காரைக்கால் மாவட்ட நிர்வாகிகளுடனும் கள ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதில் மாநில, தொகுதி, கிளை நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X