என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் 2 இடங்களில் காங்கிரசார் உண்ணாவிரதம்
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் மாநகர் மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. சமூக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்த உண்ணாவிரதம் நடந்தது.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
மாநில துணை தலைவர் நல்லசாமி, பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் ஆயுப் அலி, திருச்செல்வம், விவேகானந்தன், ஜாபர் சாதிக், மாவட்ட துணை தலைவர் ராஜேஸ் ராஜப்பா, சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் பாஷா, முகமது சாதிக், மகிளா காங்கிரஸ் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈரோடு மூலப்பட்டறையில் உண்ணாவிரதம் நடந்தது. வன் கொடுமை சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்தும், தலித் மக்கள் உரிமையை காக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். எம். பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செங்குளம் பழனிச்சாமி, சந்திரசேகர், வட்டார தலைவர்கள் முத்துக்குமார், கோபால கிருஷ்ணன், சிவக்குமார், நடராஜ், துணை தலைவர்கள் மோகன், சாதிக் பாட்ஷா, ரவி, உழவர் உழைப்பாளர் கட்சி தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






