என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி- திரளானோர் பங்கேற்பு
    X

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி- திரளானோர் பங்கேற்பு

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. 

    இதையொட்டி ஏலாக்குறிச்சி கடைவீதியில் பங்குதந்தை சுவக்கின், உதவி பங்குதந்தை திமோத்தி, திருத்தொண்டர் லூக்காஸ் மற்றும் அடைக்கல அன்னையின் பங்கு மக்கள் முன்னிலையில் குருத்தோலை மந்திரிக்கப்பட்டு, பக்தர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி ஆலயத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

    தொடர்ந்து, பங்கு தந்தை சுவக்கின் தலைமையில் உதவி பங்கு தந்தை திமோத்தி முன்னிலையில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் ஏசுவின் பாடுகள் பற்றி கூறப்பட்டு ஜெபிக்கப்பட்டது. 
    இந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், திருமானூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் பங்கு தந்தை பெல்லார்மின் தலைமையில் குருத்தோலை ஞாயிறு நடைபெற்றது. 

    அதேபோல், புதுக்கோட்டை தூய மங்கள மாதா, குலமாணிக்கம் புனித இஞ்ஞாசியர், கோக்குடி புனித இஞ்ஞாசியர் ஆலயம் போன்றவற்றில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. 
    Next Story
    ×