என் மலர்
செய்திகள்

பெருந்துறையில் கட்-அவுட்டுகள் இல்லாத தி.மு.க. மாநாடு
பெருந்துறையில் நடைபெறும் மாநாட்டை பேனர்களோ, ஆர்ச்சிகளோ, கட் அவுட்டுகளோ இல்லாத மாநாடாக நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு:
தி.மு.க மண்டல மாநாடு வரும் 24, 25-ந்தேதி பெருந்துறை அடுத்த சரளையில் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட பந்தல், முகப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மாநாட்டு திடலில் தி.மு.க. வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனை தினமும் 1000-க்கணக்கான மக்கள் பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும் மாநாட்டு வரவேற்பு குழு தலைவருமான சு.முத்துசாமி கூறியதாவது:-
ஈரோட்டில் நடைபெறும் மாநாடு பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் 41000 ஆயிரம் சதுரஅடி பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. 1 லட்சம் பேர் அமரும் வகையிலும், 5 லட்சத்துக்கும் அதிகமாக தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 500 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட நவீன கழிப்பறைகள், சுகாதாரமான குடி தண்ணீர், உணவு ஏற்பாடுகள் என அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் இருந்து வரும் தி.மு.க. பிரமுகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் 80 திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. பேனர்களோ, ஆர்ச்சிகளோ, கட் அவுட்டுகளோ இல்லாத மாநாடாக இதை நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 26-ந்தேதி இலவச திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்காக தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
தி.மு.க மண்டல மாநாடு வரும் 24, 25-ந்தேதி பெருந்துறை அடுத்த சரளையில் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட பந்தல், முகப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மாநாட்டு திடலில் தி.மு.க. வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனை தினமும் 1000-க்கணக்கான மக்கள் பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும் மாநாட்டு வரவேற்பு குழு தலைவருமான சு.முத்துசாமி கூறியதாவது:-
ஈரோட்டில் நடைபெறும் மாநாடு பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் 41000 ஆயிரம் சதுரஅடி பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. 1 லட்சம் பேர் அமரும் வகையிலும், 5 லட்சத்துக்கும் அதிகமாக தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 500 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட நவீன கழிப்பறைகள், சுகாதாரமான குடி தண்ணீர், உணவு ஏற்பாடுகள் என அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் இருந்து வரும் தி.மு.க. பிரமுகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் 80 திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. பேனர்களோ, ஆர்ச்சிகளோ, கட் அவுட்டுகளோ இல்லாத மாநாடாக இதை நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 26-ந்தேதி இலவச திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்காக தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story






