என் மலர்
செய்திகள்

கடலூர் அருகே 2 தனியார் பஸ்கள் மோதல்: 20 பேர் படுகாயம்
கடலூர் அருகே இன்று காலை இரண்டு தனியார் பஸ்கள் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. பஸ்சில் 45 பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்தநேரத்தில் பின்னால் மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த பஸ் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற பஸ் மீது மோதியது.
இதில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தன. பஸ்களில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள் என்று அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரன்டனர்.
இந்த விபத்தில் 2 பஸ்களிலும் வந்த சாத்தமங்கலத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது 40), கடலூர் வன்னியர் பாளையத்தை சேர்ந்த பிருந்தா (37), விழுப்புரத்தை சேர்ந்த செல்வம் (47) உள்ளிட்ட 20 பேர் பலத்த காயம் அடைந் தனர். அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பஸ்கள் மோதிக்கொண்டதில் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. பஸ்சில் 45 பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்தநேரத்தில் பின்னால் மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த பஸ் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற பஸ் மீது மோதியது.
இதில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தன. பஸ்களில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள் என்று அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரன்டனர்.
இந்த விபத்தில் 2 பஸ்களிலும் வந்த சாத்தமங்கலத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது 40), கடலூர் வன்னியர் பாளையத்தை சேர்ந்த பிருந்தா (37), விழுப்புரத்தை சேர்ந்த செல்வம் (47) உள்ளிட்ட 20 பேர் பலத்த காயம் அடைந் தனர். அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பஸ்கள் மோதிக்கொண்டதில் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
Next Story






