என் மலர்
செய்திகள்

சென்னிமலை பகுதியில் பொங்கல் வேட்டி-சேலை உற்பத்தி பணி தீவிரம்
சென்னிமலை பகுதியில் செயல்படும் 5 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்கான இலவச வேட்டி, சேலைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னிமலை:
சென்னிமலை பகுதியில் செயல்படும் 5 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்கான இலவச வேட்டி, சேலைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஏழை, எளியோருக்கு உதவும் நோக்கிலும் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
இதற்கான வேட்டி, சேலைகளை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். வரும் பொங்கல் பண்டிகைக்கு வழங்க உள்ள வேட்டி சேலைகளை தற்போது தமிழக அரசு கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் சங்கங்களிடம் கொள்முதல் செய்து வருகிறது.
இதில், சென்னிமலை பகுதியில் இயங்கி வரும் ஜெ.ஜெ., விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், செந்தில்குமரன் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், அர்த்னாரி ஈஸ்வரர் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், தொட்டம்பட்டி மாகாளியம்மன் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், வெங்கிட்டியம் பாளையம் அண்ணா விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகிய ஐந்து சங்கங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு உற்பத்தி நடந்து வருகிறது.
சென்னிமலை பகுதிகளில் இந்தாண்டு 4 லட்சத்து 6 ஆயிரம் வேட்டி, சேலைகள் உற்பத்தி இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 60 சதவீதம் தயாரித்துள்ளனர்.
இவற்றை ஈரோட்டில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமை கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதற்காக வேட்டி, சேலைகளை மடித்து சங்கத்தின் பெயர், பதிவு எண், விலையில்லா வேட்டி சேலை முத்திரையிட்டு வேட்டிகளை பாலித்தீன் கவர்களிலும், சேலைகளை 100 எண்ணிக்கை கொண்ட பண்டலாகவும் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை சங்க தலைவர்கள் மற்றும் மேலாண்மை இயக்குனர்கள், பணியாளர்கள் மேற்பார்வையில் செய்து வருகின்றனர். மீதம் உள்ள வேட்டி, சேலைகளை டிசம்பர் மாத இறுதிக்குள் நெய்து முடிப்பதற்காக பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னிமலை பகுதியில் செயல்படும் 5 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்கான இலவச வேட்டி, சேலைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஏழை, எளியோருக்கு உதவும் நோக்கிலும் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
இதற்கான வேட்டி, சேலைகளை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். வரும் பொங்கல் பண்டிகைக்கு வழங்க உள்ள வேட்டி சேலைகளை தற்போது தமிழக அரசு கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் சங்கங்களிடம் கொள்முதல் செய்து வருகிறது.
இதில், சென்னிமலை பகுதியில் இயங்கி வரும் ஜெ.ஜெ., விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், செந்தில்குமரன் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், அர்த்னாரி ஈஸ்வரர் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், தொட்டம்பட்டி மாகாளியம்மன் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், வெங்கிட்டியம் பாளையம் அண்ணா விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகிய ஐந்து சங்கங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு உற்பத்தி நடந்து வருகிறது.
சென்னிமலை பகுதிகளில் இந்தாண்டு 4 லட்சத்து 6 ஆயிரம் வேட்டி, சேலைகள் உற்பத்தி இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 60 சதவீதம் தயாரித்துள்ளனர்.
இவற்றை ஈரோட்டில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமை கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதற்காக வேட்டி, சேலைகளை மடித்து சங்கத்தின் பெயர், பதிவு எண், விலையில்லா வேட்டி சேலை முத்திரையிட்டு வேட்டிகளை பாலித்தீன் கவர்களிலும், சேலைகளை 100 எண்ணிக்கை கொண்ட பண்டலாகவும் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை சங்க தலைவர்கள் மற்றும் மேலாண்மை இயக்குனர்கள், பணியாளர்கள் மேற்பார்வையில் செய்து வருகின்றனர். மீதம் உள்ள வேட்டி, சேலைகளை டிசம்பர் மாத இறுதிக்குள் நெய்து முடிப்பதற்காக பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
Next Story






