என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி: பஸ் கண்ணாடி உடைப்பு
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதுரை மகன் அய்யப்பன் (25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு கொடுக்கூரிலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் குவாகம் ஆண்டாள் தெரு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அய்யப்பனின் தலைமீது பஸ்சின் முன் சக்கரம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கம் வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் தப்பி ஓடிய நிலையில் அப்பகுதி மக்கள் அய்யப்பன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த உறவினர்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அரியலூர் டி.எஸ்.பி, மோகன்தாஸ், செந்துறை இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் பொதுமக்களிடம் பஸ் டிரைவர் மீது உரிய நடைவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் குவாகம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






