search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரைவர் மீது தாக்குதல்; பஸ் கண்ணாடி உடைப்பு- 2 வாலிபர்கள் கைது
    X

    டிரைவர் மீது தாக்குதல்; பஸ் கண்ணாடி உடைப்பு- 2 வாலிபர்கள் கைது

    கடலூர் அருகே ரோட்டில் அமர்ந்து மது குடித்தவர்களை கண்டித்த டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள செல்லஞ்சேரியை சேர்ந்தவர் ஏழுமலை. அரசு பஸ் டிரைவர். இவர் காரணப்பட்டு கிராமத்தில் இருந்து கடலூர் நோக்கி பஸ்சை ஓட்டி சென்றார்.

    உடலப்பட்டு கிராமத்தில் பஸ் வந்த போது, அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார்(வயது 26), அன்பு(25) ஆகியோர் ரோட்டில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.

    இதனால் டிரைவர் ஏழுமலை பஸ்சை நிறுத்தினார். ரோட்டில் இருந்த 2 பேரையும் எழுந்து செல்லுமாறு கூறினார்.

    இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஏழுமலையை தாக்கினர். பின்னர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமார், அன்பு ஆகியோரை கைது செய்தனர்.
    Next Story
    ×