என் மலர்
செய்திகள்

சிவகங்கையில் ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை திருட்டு
சிவகங்கையில் ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கையில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). ரெயில்வே ஊழியர். சில நாட்களுக்கு முன்பு இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டனர். சம்பவத்தன்று செந்தில்குமாரும் வீட்டை பூட்டிவிட்டு இரவு பணிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 8 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
பணி முடித்து விட்டு காலையில் வீடு திரும்பிய செந்தில்குமார் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கருப்ப சாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
Next Story






