என் மலர்
செய்திகள்

அம்மாபேட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்று சுழட்டி சுழட்டி அடித்து மழை பெய்தது. அம்மாபேட்டை அருகே உள்ள கோம்பூரில் ரோட்டோரம் உள்ள ஒரு புளியமரம் காற்றில் முறிந்து விழுந்தது.
இதேபோல் சிங்கம் பேட்டை பகுதியில் ஒரு மரம் சாய்ந்தது. இதனால் மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2½ மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணி நடந்தது. மேலும் இதேபோல் சிறிய.. சிறிய மரங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
பலத்த காற்று வீசியதால் அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய-விடிய மின்சாரம் இல்லை இதனால் மக்கள் தூக்கம் இன்றி மிகவும் அவதிப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்று சுழட்டி சுழட்டி அடித்து மழை பெய்தது. அம்மாபேட்டை அருகே உள்ள கோம்பூரில் ரோட்டோரம் உள்ள ஒரு புளியமரம் காற்றில் முறிந்து விழுந்தது.
இதேபோல் சிங்கம் பேட்டை பகுதியில் ஒரு மரம் சாய்ந்தது. இதனால் மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2½ மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணி நடந்தது. மேலும் இதேபோல் சிறிய.. சிறிய மரங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
பலத்த காற்று வீசியதால் அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய-விடிய மின்சாரம் இல்லை இதனால் மக்கள் தூக்கம் இன்றி மிகவும் அவதிப்பட்டனர்.
Next Story






