என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தோடு அருகே ரோட்டை கடந்த மூதாட்டி பலி
    X

    சித்தோடு அருகே ரோட்டை கடந்த மூதாட்டி பலி

    சித்தோடு அருகே ரோட்டை கடந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை-சேலம் மெயின் ரோட்டில் சித்தோடு அருகே சென்னிவல்ல கவுண்டர் தோட்டம் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. கடந்த மாதம் 31-ந் தேதி மாலை நடந்த இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலும், தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுப்பி வைக்கப்பட்டார்.

    எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரிய வில்லை.

    அவர் மீது மோதிய வாகனம் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×