என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் நாளை மின் தடை
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு துணை மின்நிலையத்தில் நாளை (திங்கள்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
இதனால் வாய்மேடு துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வாய்மேடு, ஆலங்காடு, ஆயக்காரண்புலம், கரியப்பட்டினம், கருப்பம்புலம், வேதாரண்யம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காதென வேதாரண்யம் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
Next Story






