என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் குழந்தையை தராததால் இளம்பெண் மீது தாக்குதல்: கணவர் கைது
    X

    சிவகங்கையில் குழந்தையை தராததால் இளம்பெண் மீது தாக்குதல்: கணவர் கைது

    சிவகங்கையில் குழந்தையை தராததால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை தாக்கினார். போலீசார் அவரை கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா, எம். வேளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரி (வயது 26). இவரது கணவர் மலைராஜ் (30). இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக சிவசங்கரி, கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று மலை ராஜ், அவரது பெற்றோர் கனகராஜ்- சுப்புலட்சுமி ஆகியோர் சிவசங்கரி வீட்டிற்கு சென்று குழந்தையை தருமாறு கேட்டனர். அதற்கு சிவசங்கரி மறுக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தன்னை தாக்கியதாக சிவசங்கரி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து மலைராஜை கைது செய்தார்.
    Next Story
    ×