என் மலர்
செய்திகள்

சிவகங்கையில் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் கைது
வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகரில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சந்திரசேகர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அவர் சொந்த ஊரில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், முருகேஸ்வரி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், தொழில் தொடங்குவதற்காக வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்வதாக கூறியுள்ளார்.
புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து பெண்ணை துன்புறுத்தியதாக சந்திரசேகரை கைது செய்தார்.
Next Story






