என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான முகேஷ், சதீஷ்குமார்
    X
    பலியான முகேஷ், சதீஷ்குமார்

    பல்லாவரத்தில் மின்சார ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி

    பல்லாவரத்தில் மின்சார ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் தர்கா ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் முகேஷ் (வயது 21). எழும்பூரில் உள்ளதனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையை சேர்ந்த நண்பர் சதீஷ் குமாருடன் பல்லாரவத்துக்கு சென்றார். பின்னர் இரவு 11 மணி அளவில் இருவரும் பல்லாவரம் ரெயில் நிலையத்தையொட்டி உள்ள சுரங்கப்பாதை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

    அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முகேஷ் பலியானார். சதீஷ்குமார் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந் தார்.

    இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் மோதி நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×