என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் குஷ்பு மனு
    X

    வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் குஷ்பு மனு

    நான் குடும்பத்துடன் வெளிநாடு செல்லதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் குஷ்பு மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    மதுரை:

    நடிகை குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரசாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிபட்டி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்துத் தர மறுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நான் வெளிநாடு செல்லும்போது எந்த நாட்டுக்கு செல்கிறேன், எங்கு தங்குகிறேன் என்பது உள்பட முழு விவரத்தை மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.


    இந்த நிலையில் நான் குடும்பத்துடன் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 14-ந்தேதி வரை பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறேன். நான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    Next Story
    ×