என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறையில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை அரசு டாக்டர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மேற்பட்டப்படிப்பு படிக்க 50 சதவீகிதம் மத்திய அரசு இடஓதுக்கீடு செய்திருந்தது. தற்பொழுது அதை நீக்கிவிட்டு நீட்தேர்வு எழுதவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவ சங்க முன்னாள் நாகை மாவட்ட பொருளாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட பொருளாளர் பத்மராஜன், ரத்தினகுமார், வீரசோழன் மற்றும் 20க்கும் மேற்ப்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






