என் மலர்
செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுகிறதா?: மருத்துவ குழுவினர் 1100 பேர் தீவிர கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் பரவுகிறதா? என்று மருத்துவ குழுவினை சேர்ந்த 1100 பேர் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி கண்காணித்து வருகிறார்கள்.
ஈரோடு:
கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி மருத்துவ குழுவினர் கொடுமுடி பகுதிக்கு விரைந்து உள்ளார்கள். சரவணன் டெங்கு காய்ச்சலால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமாக இறந்தாரா? என்பது பற்றி அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இது பற்றி சுகாதார துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறியதாவது-
கொடுமுடியை சேர்ந்த சரவணன் பழனி கோவிலுக்கு பாத யாத்திரை சென்றுவிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உள்ளார். அவருக்கு காய்ச்சலுடன் வேறு நோய்களும் இருந்து உள்ளது அதற்காக அவர் சிகிச்சை பெற்று உள்ளார். எனவே அவர் டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் காய்ச்சல் அதிகமாக இருக்கும் இடங்களில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இது தவிர மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் மருத்துவ குழுவினை சேர்ந்த 1100 பேர் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி கண்காணித்து வருகிறார்கள்.
இது வரை ஈரோடு மாவட்டத்தில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.
இவவாறு அவர் கூறினார்.
கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி மருத்துவ குழுவினர் கொடுமுடி பகுதிக்கு விரைந்து உள்ளார்கள். சரவணன் டெங்கு காய்ச்சலால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமாக இறந்தாரா? என்பது பற்றி அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இது பற்றி சுகாதார துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறியதாவது-
கொடுமுடியை சேர்ந்த சரவணன் பழனி கோவிலுக்கு பாத யாத்திரை சென்றுவிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உள்ளார். அவருக்கு காய்ச்சலுடன் வேறு நோய்களும் இருந்து உள்ளது அதற்காக அவர் சிகிச்சை பெற்று உள்ளார். எனவே அவர் டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் காய்ச்சல் அதிகமாக இருக்கும் இடங்களில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இது தவிர மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் மருத்துவ குழுவினை சேர்ந்த 1100 பேர் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி கண்காணித்து வருகிறார்கள்.
இது வரை ஈரோடு மாவட்டத்தில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.
இவவாறு அவர் கூறினார்.
Next Story






