என் மலர்
செய்திகள்

நெய்வேலி என்.எல்.சி.யில் சுரங்கப்பாதை அதிகாரிகள் ஆய்வு
நெய்வேலி என்.எல்.சி.யில் சுரங்கப்பாதை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
நெய்வேலி:
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 1-வது சுரங்கம் உள்ளது. இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, அந்த நிலக்கரி அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இங்கு சுரங்கப்பாதை போன்ற தோற்றமுள்ள பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு மீட்டர் அகலம் உள்ளது. செங்கற்களால் அமைக்கப்பட்ட மரப்பலகைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இது பற்றி வரலாற்று ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனிடம் கேட்ட போது கூறியதாவது:-
இந்த சுரங்கப்பாதை பழங்காலத்தை சேர்ந்ததாக இருக்காது. ஏனெனில், சிமெண்டு கலவை அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி. சுரங்கங்கள் இருப்பது 50 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.
அப்போது, மக்கள் பயன்படுத்திய கால்வாய் அல்லது என்.எல்.சி. நிர்வாகம் தண்ணீர் கொண்டு செல்வதற்காக இந்த கால்வாய் அமைத்திருக்கலாம். இதுதவிர ஆங்கிலேயர் காலத்தில் அந்த இடத்தில் ரெயில்வே தண்டவாளங்கள் சென்றதால், ஏதேனும் பாலம் அமைத்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து என்.எல்.சி. அதிகாரிகள் கூறும்போது, முதலாவது சுரங்கத்தில் சில கட்டுமான பகுதி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 1-வது சுரங்கம் உள்ளது. இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, அந்த நிலக்கரி அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இங்கு சுரங்கப்பாதை போன்ற தோற்றமுள்ள பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு மீட்டர் அகலம் உள்ளது. செங்கற்களால் அமைக்கப்பட்ட மரப்பலகைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இது பற்றி வரலாற்று ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனிடம் கேட்ட போது கூறியதாவது:-
இந்த சுரங்கப்பாதை பழங்காலத்தை சேர்ந்ததாக இருக்காது. ஏனெனில், சிமெண்டு கலவை அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி. சுரங்கங்கள் இருப்பது 50 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.
அப்போது, மக்கள் பயன்படுத்திய கால்வாய் அல்லது என்.எல்.சி. நிர்வாகம் தண்ணீர் கொண்டு செல்வதற்காக இந்த கால்வாய் அமைத்திருக்கலாம். இதுதவிர ஆங்கிலேயர் காலத்தில் அந்த இடத்தில் ரெயில்வே தண்டவாளங்கள் சென்றதால், ஏதேனும் பாலம் அமைத்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து என்.எல்.சி. அதிகாரிகள் கூறும்போது, முதலாவது சுரங்கத்தில் சில கட்டுமான பகுதி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
Next Story






