என் மலர்

    செய்திகள்

    சத்தியமங்கலம் பகுதியில் 2-வது நாளாக சூறாவளி காற்றுடன் கொட்டிய மழை
    X

    சத்தியமங்கலம் பகுதியில் 2-வது நாளாக சூறாவளி காற்றுடன் கொட்டிய மழை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று 2-வது நாளாக சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப காற்று அனலாக வீசினாலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடி-மின்னலுடன் மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று 2-வது நாளாக சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. சத்தியமங்கலத்தில் லேசான மழை பெய்தாலும் பலத்த காற்று வீசியதால் மேலும் பல்வேறு மரங்கள் சாய்ந்தது. ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தது.

    அதே சமயம் வனப் பகுதிகளான பண்ணாரி, திம்பம், ஆசனூர், கோட்டாடை, அரேப்பாளையம், மாவநத்தம், தலமலை பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வனப்பகுதி முழுவதும் புத்துயிர் பெற்று வருகிறது. வனவிலங்குகளுக்கு தண்ணீர் பஞ்சமும் தீர்ந்து உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணை பகுதியில் 52 மி.மீ.மழையும் குண்டேரிப்பள்ளம் அணையில் 65 மி.மீ மழையும் கோபியில் 36 மி.மீ மழையும் பெய்தது.
    Next Story
    ×