என் மலர்
செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: அடுத்த கட்ட போராட்டம் குறித்து நெடுவாசலில் இன்று ஆலோசனை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நெடுவாசல் கிராமத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் மற்றும் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த கர்நாடகாவை சேர்ந்த ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். இதனால் நெடுவாசல் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் நெடுவாசல் கிராமத்து இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் தங்களை மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி விட்டதாக கூறி கடந்த 12-ந்தேதிமீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
இதனிடையே அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து இன்று மதியம் நெடுவாசலில் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர். அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.