என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி: மாடு முட்டியதில் வாலிபர் பலி
    X

    அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி: மாடு முட்டியதில் வாலிபர் பலி

    அரியலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் வாலிபர் பலியானார். 27 பேர் காயமடைந்தனர்.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழப்பழுவூரில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளைகளை 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் அடக்கினர்.

    ஜல்லிக்கட்டில் பிடி படாத காளையின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் 27 பேர் காயமடைந்தனர்.

    இதில் தோகுடி கிராமத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி (வயது 29) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வேளாங்கண்ணி இறந்தார்.

    Next Story
    ×