search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி அருகே மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலி: நில உரிமையாளர் கைது
    X

    பொன்னேரி அருகே மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலி: நில உரிமையாளர் கைது

    பொன்னேரி அருகே மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள்கள் சவுமியா (8), ரம்யா. நேற்று காலை சிறுமிகள் 2 பேரும் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர்.

    அப்போது அங்கு சரிந்து கிடந்த மின்கம்ப கம்பியில் அவர்கள் மிதித்தனர். இதில் மின்சாரம் தாக்கி சவுமியா, ரம்யா ஆகியோர் பலியானார்கள்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நில உரிமையாளர் முனுசாமியை கைது செய்தனர்.

    Next Story
    ×