என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளுக்கு வாட்டர் சர்வீஸ் செய்த போது மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாயிந்ததில் வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள அக்களுர் கலைஞர் காலனியை சேர்ந்தவர் விமல் (வயது 20). இவர் மயிலாடுதுறையில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் வாட்டர் சர்வீஸ் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது மின் மோட்டாரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு விமல் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×