என் மலர்

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் 104 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக நியமனம்
    X

    தமிழகம் முழுவதும் 104 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக நியமனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகம் முழுவதும் 2004-ம் ஆண்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியில் சேர்ந்த 104 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், அனைவரும் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் 2004-ம் ஆண்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியில் சேர்ந்த 104 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், அனைவரும் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை, நெல்லை, மதுரை, சேலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், மத்திய மண்டலம் சி.பி.சி.ஐ.டி. பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களில் சிலர் ரெயில்வே போலீசிலும் பணி புரிந்து வந்தனர்.

    இவர்களுக்கு பணிபுரிந்த இடங்களிலேயே அல்லது அவர்கள் பணியாற்றிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இன்ஸ்பெக்டர் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சொர்ணலட்சுமி, பத்மா தேவி, சித்ரா, சுஜாதா, கீதா, மகாலட்சுமி, ஜெயசுதா, அகிலா, சுமதி, பொன் சித்ரா இன்னொரு சித்ரா ஆகிய 10 பேர் சென்னையில் பணியாற்றி இன்ஸ்பெக்டர்களாகி உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×