என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய், இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்தல்: 3 பேர் கைது
    X

    துபாய், இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்தல்: 3 பேர் கைது

    துபாய் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 2 கிலோ தங்கம் கடத்திய 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    ஆந்திரா மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த முகமது ரபீக்கிடம் சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த எமர்ஜன்சி லைட்டில் 1 கிலோ 50 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்தன.

    அதே போல் சவுதி அரோபியாவில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ஆந்திரா மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த மெகபூப் பாஷா என்பவரை சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த ஹோம் தியேட்டரில் 950 கிராம் மதிப்புள்ள தங்க கட்டிகள் இருந்தன.

    முகமது ரபீக், மெகபூப் பாஷா இருவரிடமும் விசாரித்தபோது அவர்கள் உறவினர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் 3 நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் சவுதி அரேபியா சென்றுள்ளனர். அங்கிருந்து முகமது ரபீக் இலங்கை வழியாகவும், மெகபூப் பாஷா நேரடியாகவும் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    தாங்கள் வேலை இல்லாமல் இருப்பதாகவும் ஒரு கும்பல் சொன்னதின் பேரில் தங்கத்தை கடத்தி வந்ததாகவும் தங்கத்தை கொண்டு கொடுத்தால் ரூ.5000 பணம் தருவார்கள் என்றும் தெரிவித்தனர்.

    அவர்களை கடத்தல் கும்பலுக்கு போன் செய்ய வைத்தனர். அதன் பேரில் விமான நிலைய பார்க்கிங் பகுதியில் சென்று கொண்டிருந்த கடத்தல்காரன் ஒருவனை கைது செய்தனர்.

    அதே போல் முகமது ரபீக், மெகபூப் பாஷா ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.
    Next Story
    ×