search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பளம் வழங்ககோரி விவசாய தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
    X

    சம்பளம் வழங்ககோரி விவசாய தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

    நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்த விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்த விவசாயத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக கூலி வழங்கப்படவில்லை. இதனால் கந்தர்வக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

    மேலும் வருடத்திற்கு 150 நாள் வேலை என்ற சிறப்பு கால அளவு மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. கடும் வறட்சியைக் கணக்கில் கொண்டு வரும் ஜூலை மாதம் வரை கால அளவை நீட்டிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ரூ.203 கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும். கூலியை ரூ.400-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கந்தர்வக்கோட்டை ஒன்றியம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தின் போது தெரிவித்தனர்.

    போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தலைவர் மணி தலைமை வகித்தார். செயலாளர் சித்திரைவேல் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலச் செயலாளர் சங்கர், மாவட்டத் தலைவர் துரைச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்தை ஆதரித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராமையன், சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் ரத்தினவேல் மற்றும் தோழமைச்சங்க நிர்வாகிகள் வீராச்சாமி, பன்னீர் செல்வம், முத்துச் சாமி, நாராயணசாமி, இளையராஜா உள்ளிட்டோர் பேசினர்.முற்றுகைப் போராட்டத் தைத் தொடர்ந்து சங்கத் தலைவர்களை அழைத்து கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பையா, குமாரவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கடந்த மார்ச் மாதம் வரை உள்ள சம்பளப் பாக்கியை ஒரு வாரத்திற்குள் செலுத்துவதற்கு அதிகாரிகள் உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×