என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
    X

    நெய்வேலியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

    நெய்வேலியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர்.

    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 28-வது வட்டத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி தமிழ்அரசு (வயது 45). இவர் நெய்வேலி புதுநகர் 38-வது வட்டத்தில் உள்ள முத்தாளம்மன் கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை கோவிலில் வேலையை முடித்துவிட்டு தமிழ்அரசு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்ந வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கண்இமைக்கும் நேரத்தில் தமிழ்அரசு கழுத்தில் கிடந்த 1¼ பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து தமிழ்அரசு மகள் கிருத்திகா நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் நெய்வேலி தெர்மல் போலீசார் நேற்று மாலை 27-வது வட்டம் விஷ்ணுபிரியா கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் வண்டிக்குரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கூறினர். அவரிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை. முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

    இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் நெய்வேலி அருகே உள்ள ஆதண்டார்கொல்லை பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 45) என்பதும், அவர் தான் தமிழ்அரசுவிடம் நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனசேகரனை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த 1¼ பவுன் நகையை மீட்டனர்.

    Next Story
    ×