என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி அருகே பாதயாத்திரை வந்த பக்தர் பைக் மோதி பலி
    X

    பழனி அருகே பாதயாத்திரை வந்த பக்தர் பைக் மோதி பலி

    பழனி அருகே பாதயாத்திரை வந்த பக்தர் பைக் மோதி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    உடுமலை அருகே உள்ள எரிசனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 34). இவர் அதே பகுதியை சேர்ந்த சிலருடன் பழனி கோவிலுக்கு பாதயாத்திரை வந்து கொண்டு இருந்தார். பழனி அருகே அக்கமநாயக்கனூர் புதூர் என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ராஜா மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் ராஜா தூக்கி வீசப்பட்டார்.இதில் அவர் சம்பவ இடத்தில் துடிதுடித்து பலியானார். விபத்துகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×