என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானலில் பெய்த சாரல் மழை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்12 April 2017 10:14 AM GMT (Updated: 12 April 2017 10:14 AM GMT)
கொடைக்கானலில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் நீடித்து வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த வாரம் வெயில் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பகல் பொழுதில் அறையிலேயே முடங்கி கிடந்தனர். மாலை நேரத்தில் மட்டுமே சீதோசனம் நிலவி வந்ததால் வெளியே வந்தனர். பொதுமக்களும் பகல் பொழுதில் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.
இதனிடையே பகல் பொழுதில் மேகமூட்டமாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு மணி அளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் ஓரளவு தணிந்தது. ஏரிச்சாலை, செவன்ரோடு, கொடைக்கானல் நகராட்சி சாலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே நடைபயிற்சி சென்றனர்.
அதனைத் தொடர்ந்து குளுமையான சீதோசனம் நிலவியது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் நீடித்து வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த வாரம் வெயில் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பகல் பொழுதில் அறையிலேயே முடங்கி கிடந்தனர். மாலை நேரத்தில் மட்டுமே சீதோசனம் நிலவி வந்ததால் வெளியே வந்தனர். பொதுமக்களும் பகல் பொழுதில் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.
இதனிடையே பகல் பொழுதில் மேகமூட்டமாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு மணி அளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் ஓரளவு தணிந்தது. ஏரிச்சாலை, செவன்ரோடு, கொடைக்கானல் நகராட்சி சாலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே நடைபயிற்சி சென்றனர்.
அதனைத் தொடர்ந்து குளுமையான சீதோசனம் நிலவியது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X