என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமானத்தில் கோளாறு: 164 பயணிகள் தப்பினர்
Byமாலை மலர்12 April 2017 6:13 AM GMT (Updated: 12 April 2017 6:13 AM GMT)
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்த பயணிகள் விமானத்தின் சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அதிஷ்டவசமாக 164 பயணிகள் உயிர் தப்பினர்.
ஆலந்தூர்:
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. 164 பயணிகள் அதில் இருந்தனர்.
ஓடு தளத்தில் தரையிறங்கிய போது விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு சுழலாமல் நின்றது. இதனால் ஓடு தளத்தில் சக்கரம் உரசி புகை ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நிறுத்தினார்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இழுவை எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த விமானத்தை இழுத்து வழக்கமான இடத்தில் நிறுத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கிச் சென்றனர்.
இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த விமானம் காலை 6.15 மணிக்கு மீண்டும் டெல்லிக்கு புறப்பட இருந்தது. இதை தொடர்ந்து கோளாறு சரி செய்யப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. 164 பயணிகள் அதில் இருந்தனர்.
ஓடு தளத்தில் தரையிறங்கிய போது விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு சுழலாமல் நின்றது. இதனால் ஓடு தளத்தில் சக்கரம் உரசி புகை ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நிறுத்தினார்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இழுவை எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த விமானத்தை இழுத்து வழக்கமான இடத்தில் நிறுத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கிச் சென்றனர்.
இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த விமானம் காலை 6.15 மணிக்கு மீண்டும் டெல்லிக்கு புறப்பட இருந்தது. இதை தொடர்ந்து கோளாறு சரி செய்யப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X