என் மலர்
செய்திகள்

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி பொதுமக்கள் போராட்டம்
காளையார்கோவில்:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் 81 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.
காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் குருந்தினி கிராம மக்கள் அங்குள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி நின்று திடீரென்று போராட்டம் நடத்தினர். மின்னழுத்த கோபுரத்தில் ஏறிநின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார், மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த காளையார்கோவில் தாசில்தார் சந்தானலட்சுமியின் வாகனத்தை பொது மக்கள் சிறைபிடித்தனர். 15 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துவதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






