என் மலர்
செய்திகள்

லாரி மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி: 2 லாரிகள் உடைப்பு
அரச்சலூர் அருகே லாரி மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலியானார். இதை தொடர்ந்து மோதிய லாரியை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.
அரச்சலூர்:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வெள்ளியம் பாளையத்தை சேர்ந்தவர் தொம்மப்பன். இவரது மகன் பூபதி (வயது 10). 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
மாணவன் பூபதி இன்று காலை காய்கறி வாங்க வீட்டில் இருந்து கடைக்கு சைக்கிளில் சென்றான். அப்போது முன்னே ஒரு பஸ் நின்று கொண்டு இருந்தது ,
அந்த பஸ்சை மாணவன் பூபதி முந்தி செல்ல முயன்ற போது குறுக்கே வந்த மணல் குவாரி லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது .
இதில் கீழே விழுந்த மாணவன் பூபதி உடலில் லாரியின் சக்கரம் ஏறி நசுங்கியது . இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த விபத்து பற்றி அறிந்ததும் , அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .
விபத்தை கண்டித்து ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவன் மீது மோதிய லாரியை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.
அப்போது அந்த வழியாக அதே குவாரியை சேர்ந்த இன்னொரு லாரி வந்தது . அந்த லாரியையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் பதட்டம் ஏற்பட்டது .
சம்பவ இடத்துக்கு போலீசாரும், அதிகாரிகளும் விரைந்தனர் .பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகனும் சம்பவ இடத்துக்கு வந்தார்.
சுமார் 3 மணி நேரம் பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் நீடித்தது . தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வெள்ளியம் பாளையத்தை சேர்ந்தவர் தொம்மப்பன். இவரது மகன் பூபதி (வயது 10). 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
மாணவன் பூபதி இன்று காலை காய்கறி வாங்க வீட்டில் இருந்து கடைக்கு சைக்கிளில் சென்றான். அப்போது முன்னே ஒரு பஸ் நின்று கொண்டு இருந்தது ,
அந்த பஸ்சை மாணவன் பூபதி முந்தி செல்ல முயன்ற போது குறுக்கே வந்த மணல் குவாரி லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது .
இதில் கீழே விழுந்த மாணவன் பூபதி உடலில் லாரியின் சக்கரம் ஏறி நசுங்கியது . இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த விபத்து பற்றி அறிந்ததும் , அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .
விபத்தை கண்டித்து ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவன் மீது மோதிய லாரியை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.
அப்போது அந்த வழியாக அதே குவாரியை சேர்ந்த இன்னொரு லாரி வந்தது . அந்த லாரியையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் பதட்டம் ஏற்பட்டது .
சம்பவ இடத்துக்கு போலீசாரும், அதிகாரிகளும் விரைந்தனர் .பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகனும் சம்பவ இடத்துக்கு வந்தார்.
சுமார் 3 மணி நேரம் பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் நீடித்தது . தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
Next Story






