என் மலர்
செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ராஜகோபாலபுரம் மஞ்சக்கரை தெருவை சேர்ந்தவர் பிச்சையப்பன் (72). இவர் குத்தாலம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி பழனியம்மாள் (65). இவரது நடத்தையில் பிச்சையப்பனுக்கு சந்தேகம் இருந்து வந்தது. நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் அரிவாளால் பழனியம்மாளை பிச்சையப்பன் சரமாரியாக வெட்டினார்.
இதில் அவரது கழுத்து, 2 கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சத்தம்போட்டார். இதனை கேட்டதும் பழனியம்மாளின் மருமகள் அங்கு ஓடி வந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாமியாரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனியம்மாள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து குத்தாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பிச்சையப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






