என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
Byமாலை மலர்10 April 2017 10:22 AM GMT (Updated: 10 April 2017 10:22 AM GMT)
ஜோலார்பேட்டை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் மாயன்வட்டத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 55), ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
இவர் சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அங்கிருந்து சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தார். அங்கு வீட்டின் வெளிக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த காளிமுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் மற்றும் அறையில் இருந்த டி.வி. ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து காளிமுத்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X