என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது
Byமாலை மலர்10 April 2017 9:09 AM GMT (Updated: 10 April 2017 9:09 AM GMT)
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார். சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் நடந்து சென்றபோது மர்ம ஆசாமி ஒருவர் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1200-ஐ பறித்து சென்றார். இதுகுறித்து செந்தில்குமார் ஜெய்ஹிந்த் புரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெய்ஹிந்த்புரம் தேவர் நகர் பாரதியார் ரோட்டை சேர்ந்த முத்துக்காமு (வயது43) என்றும், இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 16 வழக்குகள் உள்ளது எனவும் தெரியவந்தது.
ஜாமீனில் வெளியே வந்த முத்துக்காமு, பின்னர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தநிலையில், வழிப்பறியில் ஈடுபட்டு சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X