என் மலர்
செய்திகள்

மானாமதுரை நகர் பகுதியில் புதிய சாலைகள்: மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் சுர்தாபுரம் கடைவீதி, மாரியம்மன் கோவில் தெரு, பழைய தபால் ஆபிஸ் தெரு, பட்டறை தெரு, குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.
இப்பகுதி மக்கள் புதிய சாலை அமைக்க வேண்டும் என மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடியிடம் வலியுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நகர் பகுதியில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என பேரூராட்சி அதிகாரியிடம் வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து மானாமதுரை நகர் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 1 கோடியே 41 லட்சம் செலவில் புதிய தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணியும் தொடங்கியது. பொதுமக்கள் வசதிக்காக சிவகங்கை, பெரம்பலூர், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது என்றும் எம்.எல்.ஏ. மாரியப்பன் தெரிவித்தார்.






