என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கணேஷ் அறிவிப்பு
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கணேஷ் அறிவிப்பு

    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-ந்தேதி உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, நார்த்தாமலை கிராமத்தை சேர்ந்த முத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற (10-ந்தேதி) அன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 22-ந்தேதி சனிக்கிழமை அன்று பணி நாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவித்தார்.

    இந்த உள்ளூர் விடுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவ ட்டத்திலுள்ள மாவட்ட கருவூலலும் மற்றும் சார் நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவலர்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவித்தார்.

    மேலும் அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என மாவட்ட  கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×