என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது
    X

    சீர்காழி அருகே கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது

    சீர்காழி அருகே கர்ப்பிணி பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருப்பங்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பிரம்மநாதன் மகள் தேவிகா (வயது 29). இவருக்கும், கடலூர் மாவட்டம், சிதம்பரம் எல்லைக்கட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (36) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் சரவணன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்ப்பிணியான தனது மனைவி தேவிகாவை திருப்பங்கூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார்.

    சம்பவத்தன்று காலை வீட்டின் பின்புறம் முகத்தில் காயங்களுடன் தேவிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து தேவிகாவின் தந்தை பிரம்மநாதன் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவிகாவின் கணவர் சரவணனிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் சம்பவத்தன்று மனைவி தேவிகாவை தனது வீட்டுக்கு குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் சரவணன், தேவிகாவை அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தேவிகா இறந்துள்ளார் என்று தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண் மர்ம சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி சரவணனை கைது செய்தனர்.

    Next Story
    ×