search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலியை சுத்தியலால் அடித்து கொன்ற காதலன் தற்கொலை
    X

    காதலியை சுத்தியலால் அடித்து கொன்ற காதலன் தற்கொலை

    மாமல்லபுரத்தில் காதலியை சுத்தியலால் அடித்து கொன்ற காதலன் பின்னர் காதலியின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த இருதயராஜ் மகள் ஜெனிபர்புஷ்பா (20) நுங்கம்பாக்கத்தில் மகளிர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இவரும் செம்மஞ்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த ஜான்மேத்தீசும் (22). பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். அவரது தந்தை மாணிக்கதாஸ் டெய்லராக உள்ளார். ஜான்மேத்தீசும் அவரது கடையில் வேலை செய்து வந்தார். இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.

    இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜெனிபர் காதலை முறித்துக் கொள்வோம் என்று ஜான் மேத்தீசிடம் கூறினார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெனிபரின் பிறந்தநாள் வந்தது. அப்போது கடைசியாக மாமல்லபுரத்தில் நாம் இருவரும் சந்தித்து விட்டு பின்னர் பிரிந்து விடுவோம் என்று ஜான்மேத்தீஷ் கூறினார்.

    அப்போது உனக்கு நான் பரிசு ஒன்று கொடுக்கிறேன். அதை மட்டும் வாங்கி கொள் என்று மேத்தீஷ் கூறினார்.

    இதனை நம்பி ஜெனிபர் மாமல்லபுரத்திற்கு சென்றார். இருவரும் புலிக்குகை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது பரிசு பொருள் இருப்பதாக கூறி அட்டை பெட்டியை மேத்தீஷ் காட்டினார்.

    அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஜெனிபரிடம் வற்புறுத்தினார். ஆனால் ஜெனிபர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பரிசு பொருளையாவது வாங்கி கொள் என்று கூறி அட்டை பெட்டியை திறந்தார்.

    அதில் இருந்த சுத்தியல் ஒன்றை எடுத்த மேத்தீஷ் திடீரென ஜெனிபர் தலையில் ஓங்கி அடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெனிபர் நிலைகுலைந்தார். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பலியானார்.

    பின்னர் காதலியின் துப்பட்டாவை எடுத்து அவரது உடல் அருகே சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.



    இருவரையும் காணாததால் குடும்பத்தினர் தேடினர். நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் மாமல்லபுரம் சென்றனர். அப்போது புலிக்குகை அருகில் மேத்தீஷ் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதன் அருகே 2 பேரும் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. மாமல்லபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ஜெனிபரும், மேத்தீசும் ஒன்றாகவே மாமல்லபுரம் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் மாமல்லபுரம் சென்றது எப்படி? என்பது பற்றியும், உடல்கள் அடையாளம் காணப்பட்டது குறித்தும் பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    மேத்தீசுடனான காதலை முறித்துக் கொள்வதாக கூறியதை தொடர்ந்து ஜெனிபர் எங்கு சென்றாலும் அவரது குடும்பத்தினர் கண்காணித்து வந்தனர்.

    கொட்டிவாக்கம் சாமிநாதன் நகர் 8-வது குறுக்கு தெருவில் வசித்து வரும் ஜெனிபர் நேற்று காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியில் சென்றார். அப்போது தோழிகளின் வீட்டுக்கு சென்று விட்டு மாலையில் வந்து விடுவேன் என கூறிவிட்டே சென்றார். அதன் பின்னரே மேத்தீசும், ஜெனிபரும் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் இருவரும் ஒன்றாகவே மாமல்லபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார்கள்.

    காதலை முறித்துக் கொண்டு பிரியும் போது சந்திக்க வேண்டும் என்று கூறியதால் ஜெனிபர் முழுமையாக மேத்தீசை நம்பிச் சென்றுள்ளார். ஆனால் மேத்தீசோ ஜெனிபரை கொலை செய்யும் எண்ணத்தில் பரிசு பொருளுக்கு பதில் சுத்தியலை பார்சல் போட்டு எடுத்துச் சென்றுள்ளார்.

    மாமல்லபுரத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண் டிருந்தபோதே, திடீரென தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்கிற வெறி மேத்தீசின் மனதில் ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஜெனிபரை சுத்தியலால் தலையில் அடித்து துடிக்க, துடிக்க கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

    இதற்கிடையே மாலை 6 மணி வரையில் ஜெனிபர் வீட்டுக்கு வராததால் அவரது பெற்றோர் தேட தொடங்கினர். அப்போது தான் மேத்தீசையும் காணவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் இருவரும் எங்காவது ஓடிச்சென்று வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்று நினைத்தே இரு வீட்டாரும் இரவு முழுவதும் தேடினர்.

    அப்போதுதான் மேத்தீசின் நண்பர் ஒருவர், ஜெனிபருடன் மேத்தீஸ் மாமல்லபுரம் சென்றிருப்பதாக கூறினார். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் போலீசாரின் துணையுடன் தேடினர். இதன் பின்னர்தான் இருவரது உடல்களும் சடலமாக மீட்கப்பட்டன. ஜெனிபர், மேத்தீசின் உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
    Next Story
    ×