என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமானூரில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
    X

    திருமானூரில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

    திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கவும், நிலுவையிலுள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருமானூர்:

    திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கவும், நிலுவையிலுள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் ஏலாக்குறிச்சி ஊராட்சி வாண்டராயன் கட்டளை பொதுமக்கள் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு வாண்டராயன் கட்டளை கிராமத்தில் 100 நாள் வேலையை 20 நாட்கள் தான் தருவதாகவும், நிலுவையிலுள்ள சம்பளத்தை தர கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னன், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்பீதா ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இது குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசுவதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×