என் மலர்
செய்திகள்

சிவகங்கையில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
சிவகங்கையில் குழந்தைகள் இல்லாத ஏக்கத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை:
சிவகங்கை நகரைச் சேர்ந்தவர் அஜ்மல்ராஜ் (வயது 30). தனியார் புகைப்பட கேமிராமேன். இவரது மனைவி ராதிகா என்ற ருஷ்யா (27). இவர்கள், கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தனர்.
இந்த நிலையில் குழந்தைகள் இல்லாததால், ருஷ்யா மனவேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று அஜ்மல்ராஜ் வெளியே சென்று விட்டார்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த ருஷ்யா வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாய் பூமயில், சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ருஷ்யாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது.
Next Story






