என் மலர்
செய்திகள்

அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 688 மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்''கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்''கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 688 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி.லோகேஸ்வரி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, துணை ஆட்சியர் (நிலம்) சீனிவாசன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்''கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 688 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி.லோகேஸ்வரி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, துணை ஆட்சியர் (நிலம்) சீனிவாசன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






