என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் விவசாயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பிச்சாண்டம் பாளையம், தோட்டானிச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது68).விவசாயி. இவரது மனைவி தேவகி.
சம்பவத்தன்று பழனிசாமி விஜயமங்கலத்தில் உள்ள உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார்சைக்கிளில் சென்றார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவரது மகன் ராமசாமியும், அவரது மனைவியும், குழந்தைகளும் சென்றனர்.
மூலக்கரை பஸ் நிறுத்தம் அருகே ஈரோடு- பெருந்துறை ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் பழனிசாமி வந்த மோட்டார்சைக்கிளில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார்.
பின்னால் வந்த ராமசாமி இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தனது தந்தை அருகே ஓடி வந்து பார்த்தார். உடனே ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக பழனிசாமியை கொண்டு சென்றார்.
அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பழனிசாமி இறந்து விட்டதாக தெரிவிதார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மகன் கண் எதிரே தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு பிச்சாண்டம் பாளையம், தோட்டானிச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது68).விவசாயி. இவரது மனைவி தேவகி.
சம்பவத்தன்று பழனிசாமி விஜயமங்கலத்தில் உள்ள உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார்சைக்கிளில் சென்றார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவரது மகன் ராமசாமியும், அவரது மனைவியும், குழந்தைகளும் சென்றனர்.
மூலக்கரை பஸ் நிறுத்தம் அருகே ஈரோடு- பெருந்துறை ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் பழனிசாமி வந்த மோட்டார்சைக்கிளில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார்.
பின்னால் வந்த ராமசாமி இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தனது தந்தை அருகே ஓடி வந்து பார்த்தார். உடனே ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக பழனிசாமியை கொண்டு சென்றார்.
அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பழனிசாமி இறந்து விட்டதாக தெரிவிதார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மகன் கண் எதிரே தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






