என் மலர்
செய்திகள்

சிவகங்கையில் பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் மோதல்- 4 பேர் கைது
பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கு மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் டி.புதூரை சேர்ந்தவர் கண்ணாத்தாள் (வயது 55). இவரை உறவினர் கார்த்திகேயன் கேலி செய்தாராம். இதுகுறித்து தனது மகன்கள் மணிகண்டன் (39), ஸ்ரீதர் (32), மோகன் ராஜ் (36), ஆகியோரிடம் கண்ணத்தாள் கூறியுள்ளார். அதன் பேரில் 3 பேரும் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கேட்க சென்றனர்.
அப்போது அங்கு அவர் இல்லை. இதனால் அங்கிருந்த ஜெயச்சந்திரன் (35) என்பவரிடம் இது பற்றி கேட்டனர். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.
சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து கம்பால் ஜெயச்சந்திரனை தாக்கினர். அப்போது அங்கு கார்த்திகேயன் வர, அவருக்கும் அடி- உதை விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். அதில் தன்னை தாக்கியவர்கள் தான் அணிதிருந்த நகையை பறித்து சென்றுவிட்டனர். என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தார்.
இதற்கிடையில் மோகன் ராஜ் ஒரு புகார் கொடுத்தார். அதன் பேரில் எதிர்தரப்பை சேர்ந்த கார்த்திகேயன், சங்கர், சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை நகர் டி.புதூரை சேர்ந்தவர் கண்ணாத்தாள் (வயது 55). இவரை உறவினர் கார்த்திகேயன் கேலி செய்தாராம். இதுகுறித்து தனது மகன்கள் மணிகண்டன் (39), ஸ்ரீதர் (32), மோகன் ராஜ் (36), ஆகியோரிடம் கண்ணத்தாள் கூறியுள்ளார். அதன் பேரில் 3 பேரும் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கேட்க சென்றனர்.
அப்போது அங்கு அவர் இல்லை. இதனால் அங்கிருந்த ஜெயச்சந்திரன் (35) என்பவரிடம் இது பற்றி கேட்டனர். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.
சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து கம்பால் ஜெயச்சந்திரனை தாக்கினர். அப்போது அங்கு கார்த்திகேயன் வர, அவருக்கும் அடி- உதை விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். அதில் தன்னை தாக்கியவர்கள் தான் அணிதிருந்த நகையை பறித்து சென்றுவிட்டனர். என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தார்.
இதற்கிடையில் மோகன் ராஜ் ஒரு புகார் கொடுத்தார். அதன் பேரில் எதிர்தரப்பை சேர்ந்த கார்த்திகேயன், சங்கர், சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story






