என் மலர்
செய்திகள்

அரியலூர் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி
அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் கோவிந்த புரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது43). இவர் அவரது நண்பர்கள் கலியன், தண்டபாணி ஆகியோருடன் மகாலிங்கபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் அஜித்குமார் (23) என்பவர் வந்தார்.
இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அஜித்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் இறந்தார்.
இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் கோவிந்த புரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது43). இவர் அவரது நண்பர்கள் கலியன், தண்டபாணி ஆகியோருடன் மகாலிங்கபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் அஜித்குமார் (23) என்பவர் வந்தார்.
இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அஜித்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் இறந்தார்.
இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






