என் மலர்
செய்திகள்

கடலூரில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: காண்டிராக்டர் மீது வழக்கு
கடலூரில் விஷவாயு தாக்கி 3 பேர் பலியாயினர். இச்சம்பவம் குறித்து தனியார் நிறுவன காண்டிராக்டர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்றன.
இந்த பணிகள் முடிந்ததும் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பாதாள சாக்கடை குழாய் பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனம் செய்து வந்தது.
கடலூர் மோகினிபாலம் அருகே பாதாள சாக்கடையில் நேற்று அடைப்பு ஏற்பட்டது.
கடலூர் முதுநகர் கொடிக்கால் குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார்(வயது 26), வேலு(28), புதுவை சோரியாங்குப்பத்தை சேர்ந்த முருகன்(39) ஆகிய 3 பேரும் பாதாள சாக்கடை அடைப்பை நீக்குவதற்காக வந்தனர்.
ஜெயக்குமாரும், வேலுவும் பாதாள சாக்கடை மூடியை திறந்து உள்ளே இறங்கினர். அப்போது அவர்கள் 2 பேரும் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
நீண்டநேரம் ஆகியும் 2 பேரும் வெளியே வராததால் முருகன் உள்ளே இறங்கி பார்த்தார். அப்போது அவருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
மயக்கநிலையில் இருந்த முருகனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் முருகனும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
விஷவாயு தாக்கி இறந்த ஜெயக்குமார், வேலு ஆகியோரின் உடல்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
பலியான 3 பேரின் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் இறந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், காண்டிராக்டர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சப்-கலெக்டர் ஜானிடாம்வர்க்கீஸ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சப்-கலெக்டர் ஜானிடாம் வர்க்கீசுக்கு கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் விசாரணையை தொடங்கியுள்ளார்.
விஷ வாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக புதுவை சோரியாங்குப்பத்தை சேர்ந்த அய்யனார் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது. இதையொட்டி சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன காண்டிராக்டர் ராமச்சந்திரன், திட்ட மேலாளர் ராவணன் ஆகியோர் மீது உடல் பாதுகாப்புக்கு அபாயம் விளைவித்தல், இறப்புக்கு காரணமாக இருத்தல் (336, 304-ஏ) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்றன.
இந்த பணிகள் முடிந்ததும் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பாதாள சாக்கடை குழாய் பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனம் செய்து வந்தது.
கடலூர் மோகினிபாலம் அருகே பாதாள சாக்கடையில் நேற்று அடைப்பு ஏற்பட்டது.
கடலூர் முதுநகர் கொடிக்கால் குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார்(வயது 26), வேலு(28), புதுவை சோரியாங்குப்பத்தை சேர்ந்த முருகன்(39) ஆகிய 3 பேரும் பாதாள சாக்கடை அடைப்பை நீக்குவதற்காக வந்தனர்.
ஜெயக்குமாரும், வேலுவும் பாதாள சாக்கடை மூடியை திறந்து உள்ளே இறங்கினர். அப்போது அவர்கள் 2 பேரும் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
நீண்டநேரம் ஆகியும் 2 பேரும் வெளியே வராததால் முருகன் உள்ளே இறங்கி பார்த்தார். அப்போது அவருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
மயக்கநிலையில் இருந்த முருகனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் முருகனும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
விஷவாயு தாக்கி இறந்த ஜெயக்குமார், வேலு ஆகியோரின் உடல்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
பலியான 3 பேரின் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் இறந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், காண்டிராக்டர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சப்-கலெக்டர் ஜானிடாம்வர்க்கீஸ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சப்-கலெக்டர் ஜானிடாம் வர்க்கீசுக்கு கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் விசாரணையை தொடங்கியுள்ளார்.
விஷ வாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக புதுவை சோரியாங்குப்பத்தை சேர்ந்த அய்யனார் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது. இதையொட்டி சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன காண்டிராக்டர் ராமச்சந்திரன், திட்ட மேலாளர் ராவணன் ஆகியோர் மீது உடல் பாதுகாப்புக்கு அபாயம் விளைவித்தல், இறப்புக்கு காரணமாக இருத்தல் (336, 304-ஏ) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






