என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    ஜெயங்கொண்டம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    ஜெயங்கொண்டம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் பகுதியை சுற்றி கடந்த 2013ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் மூலம் அருகில் உள்ள சோழங்குறிச்சி, தேவாமங்கலம், குருவா லப்பர்கோவில், பூவாயி குளம், விழப்பள்ளம் ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு துளையிட்டு ஆயில், வாயு உள்ளதா என பரிசோதனை செய்து பரி சோதனை குழாய்கிணறு அமைத்துள்ளனர்.

    விழப்பள்ளம் மற்றும் சோழங்குறிச்சி பிளாண்டில் கசிவு ஏற்பட்டு ஓ.என்.ஜி.சி நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து வாயு கசிவதை சரிசெய்தனர். இப்படி மாறி, மாறி கசிவு ஏற்பட்டு வருகின்றது.

    அரியலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம், விவசாயம் பாதிக்கப்பட்ட மாவட்டம், இந்த பகுதியில் திட்டத்தை துவங்கினால் மேலும் பாதிக்ககூடும், சோழர்காலத்தில் வெட்டப்பட்ட சோழகங்கம் என்கின்ற பொன்னேரி, அருகில் உலக புராதன சின்னமான கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த சின்னம் பாதிக்க படகூடாது. விவசாயம் பாதிக்க கூடாது ஆகையால் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி-யின் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவங்கவிட மாட்டோம் என தமிழக ஏரிமற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தலைவர் விசுவநாதன் மற்றும் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்து பிளாண்டை முற்றுகையிட முயன்றனர்.

    அப்போது ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி இனிகோ திவ்யன் தலைமையிலான மீன்சுருட்டி போலீசார் சங்கத்தலைவர் விசுவநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×