என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் மருந்து நாளை முதல் வழங்கப்படுகிறது
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் மருந்து நாளை முதல் வழங்கப்படுகிறது

    குழந்தைகளின் பார்வை இழப்பை தடுக்கும் நோக்கத்துடன் வைட்டமின் ‘ஏ’ திரவம் நாளை 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது.

    புதுக்கோட்டை:

    தேசிய வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டு நோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தைகளின் பார்வை இழப்பை தடுக்கும் நோக்கத்துடன் வைட்டமின் ‘ஏ’ திரவம் நாளை 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது.

    6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை 1 வயதுக்கு கீழ் 1 மில்லியும் 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2 மில்லியும் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் உத்தேசமாக 74240 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களின் மூலம் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

    5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கி வைட்ட மின் ‘ஏ’ குறைபாட்டு நோய்களிலிருந்தும் பார்வையிழப்பிலிருந்தும் குழந்தைகளை காப்போம். இத்தகவலை புதுக்கோட்டை சுகாதார பணிகள் துணை இயக்குநர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×